தூத்துக்குடி கோரம்பள்ளம் நியூ சுந்தர்நகர் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் - மல்லிகா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பாலசுப்பிரமணியம் திருநெல்வேலியில் ரயில்வே காவலராக பணியாற்றி, தற்போது ஒருவருடகாலமாக சென்னை ரயில்வே பாதுகாப்பு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று(ஜன.28) சென்னையிலிருந்து ஊர் திரும்பிய அவர் தனது அப்பாவை பார்க்க ஏரல் அருகே உள்ள தலைவன் வடலிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பிய பாலசுப்பிரமணியம், வீட்டின் ஜன்னல் கதவு முற்றிலும் உடைக்கப்பட்டு பீரேவில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.