கரூர் வெங்கமேடு காவல் நிலையம் அருகேயுள்ள அருகம்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த விசாரணையின்போது கரூர் வெங்கமேடு விவிஜி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்றும், இவருக்கு ரேவதி என்ற மனைவி மற்றும் நித்திஷ் - நிர்மல் என்ற இரண்டு மகன்கள் உள்ளதும் தெரியவந்தது. இவர் கரூரில் அமைந்துள்ள தனியார் கொசு வலை கம்பெனியின் மேலாளர் என தெரியவந்தது.
மார்ச் 6 அன்று காலை, தனது மூத்த மகனுக்கு பிறந்தநாள் என்பதனால், கேக் வாங்க விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்ற குமார், நீண்ட நேரமாகிய நிலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் குமாரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.