தமிழ்நாடு

tamil nadu

மாணவியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டல்: ஜிம் மாஸ்டர் கைது

10ஆம் வகுப்பு மாணவியை கைபேசியில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

By

Published : Oct 4, 2021, 1:55 PM IST

Published : Oct 4, 2021, 1:55 PM IST

gym tutor arrested for threatening student in thiruvallur
gym tutor arrested for threatening student in thiruvallur

திருவள்ளூர்:மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (21). இவர் உடற்பயிற்சி கூட பயிற்சியாளராக உள்ளார். இவர் 14 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவியை கைபேசியில் ஆபாசமாகப் படம்எடுத்து அதைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக இது குறித்து காவல் ஆய்வாளர் லில்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் மாணவி இணையவழி வகுப்பு பயில வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாசப் படங்களைப் பிடித்து, அதைக் காண்பித்து மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரவிந்தனைக் கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details