சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சண்முகசுந்தம், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், ”வேலூர் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 பேர். 1,301 வாக்குச்சாவடிகளும், 482 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் 15 இடங்களில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி மனு கொடுக்க வேண்டும். முக்கிய தலைவர்கள் வந்தால், அவர்களுக்கான ஹெலிபேட் உள்ளிட்டவைக்கு 20 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டும்.