வேலூர்: கடந்த ஞாயிற்றுகிழமை (ஏப்.18) வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள மோகன் என்பவரின் பட்டாசுக்கடையில், வாடிக்கையாளருக்கு பட்டாசை வெடித்து காட்டும் போது, ஏற்பட்ட விபத்தில் மோகன்(62), அவரது பேரக்குழந்தைகள் தனுஜ்(8), தேஜஸ்(6) ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்தனர்.
இதனையடுத்து பட்டாசுக்கடைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து பட்டாசுக் கடை உரிமையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, மின்வாரியம், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஏப். 20) நடைபெற்றது.