கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்திற்கு மீட்பு விமானங்கள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் மீட்பு விமானங்களில் வருபவர்கள் தங்கத்தைக் கடத்திவருவது தொடர்கதையாக இருந்துவருகிறது.
இதனையறிந்த சுங்கத் துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி தங்கத்தைப் பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த வகையில் துபாயிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளைச் சுங்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த யாழ்வேந்தன் (23) என்ற பயணி தங்கம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.