தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 892 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 851ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 608ஆக உயர்ந்துள்ளது.
இதில், திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது.