தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 6:39 PM IST

ETV Bharat / city

குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு!

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tasmac issue
Tasmac issue

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள அம்மன் நகர், சோழன் நகர், ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வரக்கூடிய சூழ் நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே ஒரு மதுபானக்கடை உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் மேலும் ஒரு அரசு மதுபானக்கடை அமைக்க பணிகள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு கடை அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

இதனால் பள்ளி, வேலைக்குச் சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அது இடையூறாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் இன்று (நவ. 23) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details