மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எட்டயபுரத்தை அடுத்த துரைசாமிபுரம் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அருப்புக்கோட்டையிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலை விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்!
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த மூன்று பேர் பலியாகினர், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த அருப்புக்கோட்டை பாளையம்பட்டியைச் சேர்ந்த ராஜம்மாள், ராஜாராம், சரோஜா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செல்வலட்சுமி, ராஜ்குமார், ஓட்டுநர் சுகன் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த எட்டயபுரம் காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காரில் வந்தவர்கள் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க வந்தபோது இந்த விபத்து நேர்ந்தது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.