சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் இறந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடியில் விசாரணை நடத்திவருகிறது. வியாபாரிகள் இறந்தது தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய நபராக கருதப்படுபவர் சாத்தான்குளம் மருத்துவமனை மருத்துவர் வினிலா. ஏனெனில் வியாபாரிகள் ஜெயராஜ், ஃபென்னிக்ஸை சிறையில் அடைப்பதற்கு முழு உடற்தகுதி பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் அளித்தது, மருத்துவர் வினிலா தான்.
காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் ஜெயராஜ், ஃபென்னிக்ஸுக்கு முழு உடல் தகுதி சான்றிதழ் வழங்கியது குறித்து, அவரிடம் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார் விசாரணை நடத்தினார்.