திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் உள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் மின் மோட்டார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் நெல்லை மாநகர மக்களுக்கு ஜன.14 முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேற்று (ஜனவரி 13) அறிவித்திருந்தார். மழை காரணமாக ஏற்கனவே சரிவர குடிநீர் கிடைக்காத சூழலில், முற்றிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.