தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2022, 8:28 PM IST

ETV Bharat / city

உறவில் இருந்த காதலி முகத்தில் திராவகம் வீசிய இளைஞர் - போலீசார் வலை வீச்சு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சேலை வியாபரம் செய்யும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த இளைஞர் அப்பெண்ணின் முகத்தில் திராவகம் வீசினார். அந்நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உறவில் இருந்த காதலி முகத்தில்  ஆசிட் வீசிய வாலிபர் - போலீசார் வலை வீச்சு
உறவில் இருந்த காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் - போலீசார் வலை வீச்சு

சிவகங்கை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வருகிறார்.

அப்பெண் ஊர் ஊராகச் சென்று சேலை வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு சேலை வியாபாரத்திற்கு சென்றபோது தேனி மாவட்டத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சேலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பெண்ணிற்கும், அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த அந்நபர் தான்மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அப்பெண்ணின் முகத்தின் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். காயமடைந்த அப்பெண் தனது சொந்த ஊரான திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை காவல்துறையினர் தலைமறைவான அந்நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:தங்கம், மின்னணு பொருள்கள் கடத்தல் : 2 பயணிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details