நெல்லை:பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த இஷாப் என்ற தனியார் நகைக்கடன் வங்கி (Esaf) செயல்பட்டு வருகிறது. இதில் தியாகராஜநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (38) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகம் (27) என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே அந்த தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வருடாந்திர ஆய்வு செய்ததில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.69 லட்சத்திற்கு இருவரும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.