தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2021, 6:50 PM IST

ETV Bharat / city

வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி

சேலம் மாவட்டத்தில் வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெந்நீர் பாத்திரம்
வெந்நீர் பாத்திரம்

சேலம்:தாதம்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு தனுஷ்(4) மகன் உள்ளார். இந்தநிலையில், நேற்று(நவ.1) தனுஷை குளிப்பாட்டுவதற்காக பெரிய பாத்திரத்தில் அவரது தாயார் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த தனுஷ், வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார். பின்னர் சிறுவன் வலியில் கதறித்துடித்துள்ளார்.

உடனே பெற்றோர் சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வின்போது, பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:காற்றாடியை பிடிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details