மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேர்முக வேலை வாய்ப்பு, மறைமுக வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துத் தரும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பெரும் முனைப்பு காட்டி வரும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தென் தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள தொழில்கள்
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களும், பெருந்தொழில்களும் தென்மாவட்டங்களில் அதிகளவில் நிறுவப்பட வேண்டும். சேவைத் துறை, தளவாடங்கள், நீராதாரத்துறை, மென்பொருள் துறை, மின்னணுவியல், உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் துறை, தோல் பொருட்கள் உற்பத்தித் துறை, நிலம் சார் குறியீடு பெற்ற பொருட்கள் போன்றவை தென் தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள தொழில்களாக உள்ளன.
தொழில்துறை முன்னேறத் தேவையான மூலப்பொருட்கள், மனித வளம், மூலதனம், உற்பத்தி பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வாய்ப்பு போன்ற கட்டமைப்புகள் தென் தமிழ்நாட்டில் அதிகளவில் உள்ளன.
நடைமுறைகளை எளிமைப்படுத்து வேண்டும்
தொழிற்சாலைகள் துவங்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு, பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையங்கள், சிறிய, பெரிய துறைமுகங்கள், தரமான ரோடு வசதிகள், மருத்துவக் கட்டமைப்பு. தொழில்துறை விதிமுறைகளை எளிமைப்படுத்தல், தொழில் முனைவோருக்கு சலுகைகள், பத்திரப்பதிவு, நிலம் கையகப்படுத்தல், மின்சாரம், நீர்வளம், தேவையான நிதி உதவி, புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்தல், தொழில் துவங்க அரசிடம் பெற வேண்டிய பல்வேறு அனுமதிகளில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தென் தமிழ்நாட்டில் தொழில்கள் அதிக அளவில் துவக்கப்பட வசதியாக இருக்கும்.
தொழிலில் வளர்ச்சி காண