மதுரை:திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 22) உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு பரப்புரைசெய்தார்.
மதுரை தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து மதுரை தெற்குவாசல் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரைசெய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இதே தொகுதியில் சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்கள். சேப்பாக்கம் தொகுதியில் முதன் முதலாக நிற்கிறேன். இதுதான் எனக்கு முதல் வாய்ப்பு. வெறும் ஐந்து நாள்கள் மட்டுமே அங்கு பரப்புரை செய்துவிட்டு இங்கு உங்களைத் தேடிவந்திருக்கிறேன். அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகுவைத்து, அடிமையாகிவிட்டனர்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டையே விற்றுவிடுவார்கள். மக்கள் உரிமை பறிபோகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் எடுபிடியாக உள்ள எடப்பாடி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும்.