மதுரை:உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஜூன் 23 முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விற்பனை ஜூலை 7 வரை நடைபெற இருக்கிறது. ஜூலை 2 வரை பத்து நாட்களில் திருச்செந்தூர், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் ரூபாய் 2,81,960 மதிப்புள்ள பனைப் பொருள்கள் விற்பனை ஆகி உள்ளன. அதேபோல் மதுரையில் ரூபாய் 1,84,660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகி உள்ளன. இந்த எட்டு ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாள்களில் ரூபாய் 6,91,473 மதிப்புள்ள பொருள்கள் விற்பனையாகி உள்ளன.
மீண்டும் ஜூலை 8 முதல் 15 நாள்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொடைக்கானல் ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு.