மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பிரிவிலிருந்து பேசுவதாகவும் தன்னுடைய பெயர் செந்தில்குமார் ஐஏஎஸ் எனக் கூறி அறிமுகம் செய்துகொண்டு, தான் மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வுசெய்ய வந்துள்ளதாகக் கூறினார்.
இதனை நம்பிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர், அவரை காரில் அழைத்துக் கொண்டு மதுரை மாநகரின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில், செந்தில்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சோமசுந்தரம், சென்னையில் உள்ள சுகாதாரத்துறை செயலருக்கு இவருடைய புகைப்படத்தை அனுப்பி சோதனை செய்தபோது போலியாவர் என்பது தெரியவந்தது.