சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த மணிமாறன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
அதில், "நான் அதிமுக கட்சியின் சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளராக உள்ளேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்துள்ளார். 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தனது தனித்துவமான குணங்களால் உலகின் மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். அரசியலில் முழு ஈடுபாட்டுடன் பயணித்த ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கொண்டுவந்தார். அவரின் சிறப்பான நிர்வாகத் திறன்களைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.