மதுரை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
குறிப்பாக மதுரை சிம்மக்கல், கோரிப்பாளையம், அரசரடி, மாப்பாளையம், பெரியார், தமுக்கம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை மெட்ஜூரா கோட்ஸ் ஒட்டியுள்ள முத்து மேம்பாலத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பழமையான ராட்சத அரசமரம் திடீரென நேற்று (நவ.07) முறிந்து விழுந்தது.