ஈரோடு மாவட்டம், கள்ளுக்கடைமேடு பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தின் போது குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான மாசி மாத குண்டம் விழா, கடந்த மாதம் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், மூலவர் வீதி உலா, பக்தர்களின் நேர்த்திக்கடன் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.