தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 13, 2019, 3:45 PM IST

ETV Bharat / city

முட்டாளாக இல்லாமல் சிந்தித்து வாக்களியுங்கள் - கோவை சரளா!

கோவை: ஏப்ரல் 18ஆம் தேதியும் முட்டாளாக இருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என காமெடி நடிகை கோவை சரளா பேசினார்.

ஏப்ரல் 18-ஆம் தேதி முட்டாளாக இருக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள் -கோவை சரளா!


கோவை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகை கோவை சரளா பல்லடம் எம்ஜிஆர் ரோட்டில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இன்று பெண்கள் எங்கும் சுதந்திரமாக நடந்து செல்லும் நிலை இல்லை. எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய நகையுடன் இரவில் தனியாக நடந்து செல்கிறாளோ அப்போது தான் முழுமையாக சுதந்திரம் கிடைத்ததாக காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் அந்த சுதந்திரம் இன்று வரை கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும், வருடத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தான் முட்டாள்கள் தினம். ஆனால் ஏப்ரல் 18ஆம் தேதியும் நாம் முட்டாளாக இருந்தால், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். எனவே, பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details