தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேவல் திருட்டு: கொலையில் முடிந்த வாக்குவாதம்

சேவல் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

By

Published : Nov 12, 2021, 2:49 PM IST

சேவல் திருட்டில் ஈடுபட்டதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர் படுகொலை
கொலையில் முடிந்த வாக்குவாதம்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த பாலத்துறை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெயின்டர் விஜய் (23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சபீர் (24) என்பவரின் சேவல் ஒன்றைத் திருடி, விஜயிடம் கொடுத்து விற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

விஜயும் சேவலை விற்று பணத்தைக் கொடுத்துள்ளார். இதனையறிந்த சபீர் தனது சேவலை கொடுக்குமாறு விஜயிடம் தகராறு செய்துள்ளார். விஜய் தனது பணத்தில் அதே சேவலை வாங்கி சபீரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், சபீர் தன்னிடம் இருந்த நிறைய சேவல்களும் இதேபோன்று காணாமல்போனதாகவும் அவை அனைத்தையும் திருப்பித் தருமாறும் கூறி விஜயிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் தன் நண்பர் விஷ்ணு என்பவருடன் பாலத்துறை பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் இருந்தபோது, சபீர் செல்போனில் அழைத்து சேவல் பிரச்சினை தொடர்பாக பேச வருமாறு விஜயை அழைத்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி அருகே விஜய் சென்றுள்ளார்.

கொலையில் முடிந்த தகராறு

சம்பவ இடத்திற்குச் சென்றபொழுது விஜய், சபீர் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீர் தன் நண்பர்களுடன் சேர்ந்து விஜயை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து காவல் துறையினர் விஜயின் உடலை உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தலைமறைவான சபீர், அவரது நண்பர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:சிபிஎம் கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details