தமிழ்நாடு

tamil nadu

மக்கள் நீதி மய்யம் சார்பாக பொள்ளாச்சியில் களமிறங்கும் சாதனை பெண்!

கோவை: நம்பிக்கையும் மற்றும் துணிச்சலும் நிறைந்த வேட்பாளரை மக்கள் நீதி மய்யம் பொள்ளாச்சியில் களமிறக்கியுள்ளது.

By

Published : Mar 25, 2019, 11:39 PM IST

Published : Mar 25, 2019, 11:39 PM IST

mayyam

மக்கள் நீதிமய்யம்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணலில் மட்டுமல்ல வேட்பாளர்களை தேர்வு செய்யும் முறையிலும் வித்தியாசம் காட்டியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவையில் நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்தான் மூகாம்பிகை ரத்தினம்.

பெண் சமூக செயற்பாட்டாளரான மூகாம்பிகை ரத்தனம் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகளில் சாலைப் பயணம் மேற்கொண்ட இவர், கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதைத்தவிர அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களின் துணையோடு பல்வேறு இடங்களில் நட்டு மரம் வளர்க்க பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் , கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலியின் மூலமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இவர் அளித்த புகார்தான் தமிழகமே அதிரும் செய்தியானது.

இதனை தொடர்ந்து பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர் .

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இவர். ஒரு துணிச்சல் மிக்க பைக் ரேஸர்.

இவர் கடந்த 8-ந்தேதி மக்கள் நீதிமய்யம்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில்தான் பொள்ளாச்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் இந்த சாதனை பெண்.

ABOUT THE AUTHOR

...view details