கோவையில் பத்திரிகையாளர்கள் என்று பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று (செப்.13) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும்; அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருகிறேன் என்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.