தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2021, 10:18 AM IST

Updated : Mar 2, 2021, 11:12 AM IST

ETV Bharat / city

மது போதையில் பரோட்டாவில் கைவைத்தவர் அடித்துக் கொலை!

கோவை: சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பரோட்டாவில் கைவைத்த நபர் கொலை செய்யப்பட்டார்.

புரட்டோவில் கை வச்சது குத்தமா? கொலையில் முடிந்த சண்டை! அல்லது புரோட்டாவில் கை வைத்த நபர் கொலை!
புரட்டோவில் கை வச்சது குத்தமா? கொலையில் முடிந்த சண்டை! அல்லது புரோட்டாவில் கை வைத்த நபர் கொலை!

கோயம்புத்தூர் ஆனைக்கட்டி சாலை தனியார் செங்கல்சூலை குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது நண்பர்கள் சுரேஷ், ஜெயக்குமார் (25), வெள்ளியங்கிரி(52). இவர்கள், நேற்றிரவு (மார்ச்1) கிருஷ்ணகுமார் குடியிருப்பிற்கு வந்துள்ளனர்.

அங்கு வெள்ளியங்கிரி பரோட்டோ சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது, குடிபோதையிலிருந்த ஜெயக்குமாரும் பரோட்டாவில் கை வைத்துள்ளார். வெள்ளியங்கிரி உடனே கையை எடு என்று கூறவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

வாக்குவாதத்தில் வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் மனைவியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து வெள்ளியங்கிரியை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி ஒரு மரக்கட்டையால் ஜெயக்குமாரின் பின்தலையிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமுற்ற ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜெயக்குமாரின் தாயார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் துறையினர் வெள்ளியங்கிரியை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Last Updated : Mar 2, 2021, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details