தமிழ்நாடு

tamil nadu

மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்

மயிலாப்பூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் மீது அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இருவர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

By

Published : Jul 11, 2021, 7:51 AM IST

Published : Jul 11, 2021, 7:51 AM IST

மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார்
மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார்

சென்னை: மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் முன்னாள் மாணவிகள், 3 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இந்த பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவிகள் இருவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரில் தாங்கள் பயின்ற போது ஆசிரியர்களாக இருந்த 3 பேர் வகுப்பறையில் பல முறை தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், 3 ஆசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தவும், புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பதுபோல் அழைத்து மோசடி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details