தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, 5.1.2020 முதல் 12.1.2020 வரை நடைபெறும்.
தொகுதி – 1இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.