சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவற்றில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாள்களாகும். மேலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் பள்ளிகளைத் திறந்து நடத்தினால் மாணவர்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், காேடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
மே மாதத்தில் வகுப்புகள் தேவையற்றது