சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (அக்.23) நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை செலுத்த வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1.1 ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கால அவகாசம் முடிந்து இரண்டாவது தவணை செலுத்த வேண்டிய 57 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்று (அக்.23) நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய 32 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
வதந்தி
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 4 லட்சம் முதியவர்கள் இருக்கும் நிலையில் 47 லட்சம் பேர் தான் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அவர்களில் 20 விழுக்காடு பேர்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதியவர்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 68 விழுக்காடு பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 26 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்று தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 70 விழுக்காடு பேர் தடுப்பூசி செலுத்திய நிலையை அடையும் என எதிர்பார்க்கிறோம்.
100 கோடி தடுப்பூசி செலுத்திய பின்னரும் வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. கரோனா தொற்று நாமக்கல் மாவட்டத்தில் சற்று அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்று அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பண்டிகை காலத்திற்குப் பின்னர் தோற்று அதிகரித்துள்ளது” என்றார்.
மூன்றாவது அலை வர வாய்ப்பு