தமிழ்நாடு

tamil nadu

பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்; காணொலி வைரல்!

மும்பையில் உயிரிழந்த பாம்பை கொண்டு இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் ஆடும் காணொலி இணையத்தில் வெளியாகி, விலங்குகள் நல ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

By

Published : Dec 19, 2021, 6:35 PM IST

Published : Dec 19, 2021, 6:35 PM IST

பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்; காணொலி வைரல்!
பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்; காணொலி வைரல்!

மும்பையை ஒட்டியுள்ள பால்கர் பகுதியில் நன்கு வளர்ந்த உயிரிழந்த பாம்பினை, இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி தூக்கி எறியும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த காணொலியில் இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு, இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார்.

காணொலியின் பின்னணியில் பலரும் இளைஞரின் செயலை சிரித்து கிண்டல் அடித்து மகிழ்வது போல காணொலியில் உள்ளது. காணொலி வைரலாகியதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் சிறுவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வைரல் வீடியோ : தாய் குரங்கின் பாசப்போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details