சென்னை: பக்ரீத் பட இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள்’ பட நாயகன் வெற்றி, ஷிவானி நாராயணன் நடிக்கும் திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு உடன் கைகோர்த்துள்ளார். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே இந்தத் திரைப்படம். ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.