தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2019, 9:46 AM IST

ETV Bharat / city

'கர்நாடக ஜனநாயகத்துக்கு தற்காலிக தோல்வி...!'

சென்னை: கர்நாடகாவில் அரசு தோற்கவில்லை; ஜனநாயகம்தான் தற்காலிகமாக தோல்வியடைந்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

s azhagiri

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "பணத்தைக் கொண்டு மோடியின் சர்வாதிகார ஆட்சி கர்நாடகாவில் வெற்றிபெற்றுள்ளது. மனிதர்களுக்கு பலவீனம் உள்ளது; பாஜக அதை பயன்படுத்தி விலைபேசுகிறது அல்லது பலவீனமாக்க முயற்சி செய்கிறது. ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையதல்ல.

கே.எஸ். அழகிரி பேட்டி

ஆளுநர் அதிகாரம், பணபலம் உள்ளிட்டவை பயன்படுத்தி மத்திய அரசு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் அரசாங்கம் தோற்கவில்லை; ஜனநாயகம்தான் தற்காலிகமாக தோல்வி அடைந்தள்ளது. விரைவில் அங்கு ஜனநாயகம் வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details