சென்னை:தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கியது. நீர்வளத் துறையின் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இதில் நீர்வளம் - நிலவளம் என்ற தலைப்பில், நீர்வளத்துறையின் சாதனைகள் - 2022 என்ற 260 பக்கங்கள் கொண்ட புத்தகமும், பேரவைக்கூட்டத்தின் முதல்நாள் இன்று என்பதால், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் மேஜைகளிலும் ரோஜாப்பூ வைக்கப்பட்டிருந்தது.
கேள்வி நேரத்திற்குப் பிறகு, முதலமைச்சர் 110-விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சொத்து வரி உயர்வு குறித்துப்பேசினார்.