தமிழ்நாடு

tamil nadu

துபாயிலிருந்து வந்தவருக்கு கரோனா- இன்றைய பாதிப்பு 812

தமிழ்நாட்டில் இன்று (நவ.12) 812 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By

Published : Nov 12, 2021, 9:46 PM IST

Published : Nov 12, 2021, 9:46 PM IST

ETV Bharat / city

துபாயிலிருந்து வந்தவருக்கு கரோனா- இன்றைய பாதிப்பு 812

Covid
Covid

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 812 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டு உள்ளது என மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.

கரோனா புள்ளிவிவர அறிக்கை
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஒரு ஆயிரத்து 845 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் 811 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என 812 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 111 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 27 லட்சத்து 13 ஆயிரத்து 216 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன.

8 பேர் உயிரிழப்பு
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து மேலும் 927 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி

இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 60 ஆயிரத்து 67 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 6 நோயாளிகளும் என 8 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 259 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  • சென்னை 5,56,045
  • கோயம்புத்தூர் 2,48,042
  • செங்கல்பட்டு 1,72,698
  • திருவள்ளூர் 1,19,752
  • ஈரோடு 1,05,075
  • சேலம் 1,00,532
  • திருப்பூர் 96,157
  • திருச்சிராப்பள்ளி 77,949
  • மதுரை 75,344
  • காஞ்சிபுரம் 75,266
  • தஞ்சாவூர் 75,738
  • கடலூர் 64,260
  • கன்னியாகுமரி 62,580
  • தூத்துக்குடி 56,414
  • திருவண்ணாமலை 55,083
  • நாமக்கல் 52,742
  • வேலூர் 50,013
  • திருநெல்வேலி 49,508
  • விருதுநகர் 46,352
  • விழுப்புரம் 45,951
  • தேனி 43,590
  • ராணிப்பேட்டை 43,498
  • கிருஷ்ணகிரி 43,712
  • திருவாரூர் 41,677
  • திண்டுக்கல் 33,148
  • நீலகிரி 33,775
  • கள்ளக்குறிச்சி 31,472
  • புதுக்கோட்டை 30,258
  • திருப்பத்தூர் 29,353
  • தென்காசி 27,378
  • தருமபுரி 28,605
  • கரூர் 24,328
  • மயிலாடுதுறை 23,321
  • இராமநாதபுரம் 20,591
  • நாகப்பட்டினம் 21,187
  • சிவகங்கை 20,301
  • அரியலூர் 16,890
  • பெரம்பலூர் 12,089

இதுவரை, சர்வதேச விமானத்தில் வந்தவர்களில் 1,029 பேருக்கும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்களில் 1,085 பேருக்கும், ரயில் மூலம் வந்தவர்களில் 428 பேருக்கும் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : கரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும்.. அமைச்சர் எ.வ.வேலு

ABOUT THE AUTHOR

...view details