சென்னை:கரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து, மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையைத் தவிர்க்கவும், இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டும் பள்ளிக் கல்வித் துறைப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக; தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரக்கடைசியில் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக பள்ளிக்கு வராத மாணவர் குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன.