தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராணிப்பேட்டை சாலை விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

By

Published : Aug 2, 2022, 10:52 AM IST

ராணிப்பேட்டை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு
ராணிப்பேட்டை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: சோளிங்கர் – அரக்கோணம் சாலையில் SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) மற்றும் உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது நேற்று மாலை அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், "இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மாரியம்மன் கோவில் திருவிழா - கூழ் அண்டாவில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details