சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயில் பயணிகளிடம், ரயில்வே போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த கோட்டா வெங்கட் தினேஷ் குமார் என்பவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டதால், அவரை தனியாக கூட்டிச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது உடமைகளில் இருந்து கட்டு கட்டாக பணம் சிக்கியது.
இதற்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் அவரை கைது செய்த போலீசார் பணத்தையும் பறிமுதல் செய்தனர். முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் 52 லட்ச ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மெரினாவில் மாமூல் கேட்டுத்தகராறு:'தரமுடியாது' எனக்கூறிய பெண்ணுக்கு வெட்டு - இருவர் கைது