தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 14, 2019, 2:34 PM IST

ETV Bharat / city

கல்லூரி மாணவரின் கடையை அடித்து நொறுக்கிய போலீஸ்

சென்னை: கல்லூரி மாணவர் நடத்திவந்த தள்ளுவண்டி கடையை காவல்துறை அதிகாரிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police

சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துர் ரகுமான். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதுமட்டுமின்றி கல்லூரி நேரம் போக தள்ளுவண்டி கடை வைத்து உணவு விற்பனை செய்துவருகிறார். அதில் வரும் வருமானத்தை தனது கல்லூரி செலவுக்கு பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரகுமானின் தள்ளுவண்டி பலத்த சேதமடைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகிலிருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்தபோது, காவல்துறை அதிகாரிகள் அந்த வண்டியை அடித்து நொறுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

முன்னதாக காவல் துறை அதிகாரிகள் ரகுமானிடம் லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு ரகுமான் மறுத்ததால் கடையை அவர்கள் அடித்து நொறுக்கினார்கள் எனவும் கூறப்படுகிறது. மக்களை காக்க வேண்டிய காவலர்களே மக்களில் ஒருவரின் உடைமையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details