சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த முனையம் டிஜிட்டல் மயமாகக் கட்டப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு தொடங்கிய பணிகள் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் அவை புதிய பன்னாட்டு முனையமாக செயல்பட உள்ளது. சுங்கத்துறை, குடிபெயர்வு, பாதுகாப்பு பிரிவுகள் என பல்வேறு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
நவீன தொழிநுட்ப வசதிகள் ;இந்த புதிய முனையம் சர்வதேச தரத்தில் முற்றிலும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அமைகிறது. அதன் உள்பகுதியில் கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், சுற்றுலா இடங்கள் இடம்பெறுவதோடு, அதன் மேற்கூரை அழகுர வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு டெர்மினல் கட்டடங்கள், பேக்கேஜ் கன்வேயர், ஏர் கண்டிஷனர், ஐ.டி மற்றும் ஏர்போர்ட் சிஸ்டம், மல்டி லெவல் கார்பார்க்கிங் என மிகப்பெரிய நவீன தொழிநுட்ப வசதிகளோடு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள் வருகை இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய பன்னாட்டு முனையம்: கண்ணைக் கவரும் வகையில் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. முனையத்தின் கீழ்ப் பகுதியை அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து விளக்குகள் அனைத்தையும் இயக்கி சோதனை நடைபெற்றது. அடுத்த 2 மாதங்களில் விமான சேவை நிறுவனங்கள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவை ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய செயலி அறிமுகம்:அதேபோல், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமானநிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம்,வணிக வளாகங்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் 80% முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக "புதிய செயலி" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர். அதில் பயணிகள் சிரமம் இன்றி சுலபமாக விமானப் பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளதாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் கூறியதாவது, 'சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய முனையத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் பிரத்யேகமான செயலி ஒன்றை சென்னை விமான நிலைய ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.