சென்னை:நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாகாலாந்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள், தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம்
விருந்தினர் இல்லம் அமைக்க 10,000 சதுர அடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ கடிதம் எழுதியுள்ளார்.
நாகாலாந்து முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம்
மேலும், இது மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வேலையில்லாதவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய்... முதலமைச்சர் அதிரடி...