தமிழ்நாடு

tamil nadu

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை!

​​​​​​​சென்னை: காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால் வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும் என வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Oct 3, 2019, 12:48 PM IST

Published : Oct 3, 2019, 12:48 PM IST

ETV Bharat / city

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை!

வைகோ

மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப்படிம எரிவாயு திட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு மக்களின் கோரிக்கைகளைத் துச்சமாக கருதி வரும் மோடி அரசு, மே மாதம் காவிரிப் படுகை பகுதிகளை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்தது. இதன்படி பிரிவு 1-இல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைப்பதற்குத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் மற்றும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.

வலுக்கும் போராட்டம்: பிரதமருக்கு 10ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைப்பு

அதன்பின்னர் ஜூலை மாதம் திறந்தவெளி அனுமதி கொள்கையின் கீழ் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டங்களில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்திட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் போராட்டம் - 750 பேர் மீது வழக்குப் பதிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு போராடி வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேலும் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் -2, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, காரைக்காலில் 3, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என மொத்தம் 20 கிணறுகள் 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திட தற்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

காவிரி பாய்ந்தோடும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளை பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, பாலைவனம் ஆக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதும், அதற்கு தமிழ்நாடுஅரசு கள்ளத்தனமாகத் துணை போய், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசக்காரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details