சென்னை:வேல் யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்த நடிகை குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரை நிகழ்வில் பங்கேற்பதற்காக, நடிகை குஷ்பு இன்று(நவ.18) காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற காரின் மீது சரக்கு வாகனம் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நடிகை குஷ்பு உயிர் தப்பினார். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள குஷ்பு, “நான் நலமுடன் இருக்கிறேன். முருகக் கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார். என் கணவரின் நம்பிக்கை வீண்போகவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகை குஷ்பு கார் மீது மோதிய லாரி தொடர்ந்து, “நான் சென்ற வாகனம் சரியான பாதையில் தான் பயணித்தது. தவறாக வந்து என் வாகனத்தில் இடித்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்” என்றும், தனது பதிவில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.