புதுச்சேரி, தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், வாகனத்தின் உள்ளே ஏராளமான பணம் கட்டுக் கட்டாக இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, பிடிபட்ட வாகனம், வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்ப பயன்படுத்தும் தனியார் பாதுகாப்பு நிறுவன வாகனம் என்பது தெரிய வந்தது. ஆனால், நிறுவனத்தின் பெயர் ஏதும் வாகனத்தில் அச்சடிக்கப்படவில்லை. மேலும் பிடிபட்ட பணத்தின் மதிப்பு இரண்டு கோடி என்றும் தெரிய வந்தது.