தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை

தமிழ்நாடு சிறப்பு செலவின பார்வையாளர்கள் மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டனர்.

By

Published : Mar 13, 2021, 9:04 PM IST

விறுவிறுப்பாகும் தேர்தல் களம்: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை
விறுவிறுப்பாகும் தேர்தல் களம்: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலுக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் துறை மேற்கொண்டுவருகிறது.

இந்த தேர்தலை பொறுத்தவரை கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில் தமிழ்நாடு, செலவின கவனம் பெற்ற மாநிலமாக கருதப்படுவதால், ஓய்வுப் பெற்ற ஐ.ஆர்.எஸ் அலுவலர்களான மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே தமிழ்நாடு வந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டர்.

இதில் தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது, பணப்பட்டுவாடாவை எவ்வாறு தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மேலும் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details