சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலுக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் துறை மேற்கொண்டுவருகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில் தமிழ்நாடு, செலவின கவனம் பெற்ற மாநிலமாக கருதப்படுவதால், ஓய்வுப் பெற்ற ஐ.ஆர்.எஸ் அலுவலர்களான மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே தமிழ்நாடு வந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்துவருகின்றனர்.