தமிழ்நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பத்திரிகையாளர்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'கடந்த 8ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நாளிதழ் செய்தியாளர் டென்சன் (50) கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தார். அதே நாளில் மதுரையில் பிரபல நாளிதழின் முன்னாள் மூத்த பத்திரிகைப் புகைப்படக் கலைஞர், மதுரை செய்தியாளர் சங்கத் தலைவராக பணியாற்றிய நம்பிராஜன் (64) கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அடுத்த நாள் (மே 09) அன்று மதுரையில் பத்திரிகையாளர் சரவணன்(48), நேற்று (மே 11) கோயம்புத்தூரின் சூளுர் பகுதி மாலை பத்திரிக்கை செய்தியாளர் மணி (47) ஆகியோர் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.