சென்னை:தனியார் பள்ளிகளிலுள்ள இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களில் ஆண்டுதோறும் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழங்கிவருகிறது.
2013-14ஆம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வி ஆண்டு வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்ந்த தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 419 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.