சென்னை: மெட்வே ஹார்ட் இன்ஸ்டியூட்டின் 5ஆவது கிளையைத் தொடங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்கும் முகவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் 11 முகவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஊரடங்கு காலத்தில் தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதலை குறைத்துக் கொண்டதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆவின் நிறுவனம் அதிகளவு பால் கொள்முதல் செய்தது.