தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2020, 2:56 PM IST

ETV Bharat / city

'மக்கள் சேவையில் டாண்டனின் பணி மகத்தானது' - முதலமைச்சர் இரங்கல்

சென்னை: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

tandon
tandon

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனையடைந்தேன்.

மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிகார் மாநில ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பொதுவாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது.

லால்ஜி டாண்டனின் மறைவு, உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு

ABOUT THE AUTHOR

...view details