இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8.15 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.10 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில் இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி ) முதல் வரும் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரியில் இருந்து மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரையில் கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.20 மணிக்கு திருப்பதிக்கு செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 11.10 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை வேளச்சேரி, சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.